எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று பீகார் பயணம்..!

வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக நேற்று முன்தினம் நடைபெற்ற ‘கலைஞர் கோட்டம்’ திறப்பு விழாவில் அறிவித்தார். இந்த நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) பீகார் செல்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல உள்ளார். நாளை நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பிறகு, நாளை இரவு அங்கிருந்து சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்தெந்த கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பது இன்று மாலைதான் தெரியவரும் என்று கூறப்படுகிறது..