கோவையில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறிப்பு..!

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). தொழிலாளி. இவர்
சம்பவத்தன்று ரெட்பீல்டு சாலையில் செல்போனில் பேசி கொண்டு நடந்து
சென்றார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்
லோகநாதன் கையில் இருந்த செல்போனை பறித்து அவரை கீழே தள்ளிவிட்டார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்
அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து லோகநாதன் ராமநாதபுரம்
போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.