கோவை மே 31 கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அங்குள்ள கஞ்சி கோணாம்பாளையம். வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா,மேலும் கஞ்சா ...

நம் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன. அந்த வகையில் வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் இருந்து 160 வங்கதேசத்தினர் இந்திய விமானப்படை விமானத்தில் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ...

2019 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக – பாமக கூட்டணி அமைத்தன. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது என கையெழுத்தானது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக ஆதரவுடன் பாமக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்பட ஆறு எம்.பி.க்களின் ...

பா.ஜ., சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சென்னை திருவான்மியூரில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான ...

அரக்கோணம்: ​தி​முக​வினர் பொதுக்​கூட்​டம் நடத்தி தன்னை குற்​ற​வாளி​போல் சித்​தரிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி, திமுக முன்​னாள் பிர​முகர் மீது புகார் அளித்த கல்​லூரி மாணவி கண்​ணீர் மல்க வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த பருத்​திப் ​புத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் பிரீத்​தி(21), கல்​லூரி மாண​வி. இவர் சமீபத்​தில் தனது கணவரும் மற்​றும் முன்​னாள் திமுக அரக்​கோணம் மத்​திய ஒன்​றிய ...

பாகிஸ்தான் : இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்னை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என்று ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ...

கோவை மே 27 கோவை ராமநாதபுரம் சுங்கம் திருச்சி ரோட்டில்,கேக் பாயிண்ட் எதிர்புறம், வலது புறமாக திரும்பும் இடத்தில், “முதல் யூ டேர்ன் “உள்ளது.இதன் அருகே உள்ள “மேம்பாலத்தின் பெரிய தடுப்புச் சுவர் மறைப்பதால் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசை நோக்கி வரும் வாகனங்கள்,வலது புறம் திரும்புவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அந்த இடத்தில் விபத்து  ஏற்படும் ...

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட, ஜூன் 2ஆம் தேதி மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்களவையில் திமுகவுக்கு மொத்தம் 4 இடங்கள் கிடைக்கும் என்றும், அதில் ஒன்றில் கமல்ஹாசன் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் ...

எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக 126 அடி உயரத்திலான கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமி, 5771 ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “தீயசக்தி ...

சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவது, அதன்மூலம் ஆராய்ச்சி, புதுமை படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் ...