சென்னை: நமது ஆயுதப்படையே மேலும் வலுப்படுத்த அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது நமது ஆயுதப்படையின் தன்மையை இளமையாக்க உதவும் என்று பதிவிட்டுள்ளார். தேசபக்தி மற்றும் துணிச்சலான இளைஞர்களை உருவாக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் ...
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.6.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி சிறப்பித்தார். மாநிலத்தின் ...
வரும் ஜூலை 13 முதல் 16 வரை மேற்கு ஆசியப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகத் திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னெட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் ஆன்லைன் மூலமாக விர்ச்சுவல் மாநாட்டில் பேச்சுவார்த்தை ...
சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதற்கான விபரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முக்கிய காரணமே தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான ...
ராமேசுவரம்: தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள 26 சதுப்பு நிலங்களை, ராம்சார் ஸ்தலங்களாக அறிவிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடரிலிருந்து நிலப்பகுதிகளை காப்பதில் முக்கியப் பங்காற்றும் சதுப்பு நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காக 2.2.1971 அன்று ஈரான்நாட்டின் ராம்சார் நகரில் ...
நேஷனல் ஹெரால்ட் நாளிதழை, ராகுல், சோனியாவுக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்ட இந்த விசாரணையானது, இரண்டு நாள்களாக நடைபெற்றது. இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ...
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒன்றிய அரசு அறிமுகம் செய்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு மாற்றாக ...
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகைகளின் பங்குகளை மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பியிடம் மீண்டும் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 2-வது நாளாக நாடு முழுவதும் ...
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். ஜெர்மன் ...
ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் அவருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அருகில் உள்ள வகுப்பறைக்குச் சென்ற முதல்வர் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ...













