சென்னை: ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஆதரவான விளம்பரங்களில் நடிகர் சரத் குமார் நடிக்க வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து ...

துடில்லி: மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் பதிவுத்துறை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தமசோதாவிற்கு ஜனாதிபதி ...

75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோவையில் பயணிகள் மற்றும் கட்சியினருக்கு தேசிய கொடி வழங்கிய பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவி காயத்திரி ரகுராம். இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினம் அனைவராலும் கொண்டாடபட்டு வரும் நிலையில் அனைவரும் அவரவரது வீட்டில் தேசிய கொடியேற்றி ...

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில், நாமக்கல் ...

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் 3 விதமான மாற்றங்கள் கட்சியில் நடக்க வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் ...

வேலூர்: தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட அழுத்தம் கொடுக்கப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை தடுக்கும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ...

பொது இடங்களில் ஒட்டப்பட்ட தி.மு.க வினர் போஸ்டர்களை கிழித்தெறிந்த பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீசார் தடியடி  கோவையில் பரபரப்பு… பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பிற இடங்களில் ஒட்டப்பட்ட அனைத்துக் கட்சியினரின் போஸ்டர்கள் கோவை மாநகராட்சியால் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இது ...

பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், நன்றி அண்ணா, இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினமா ...

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாஎன்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.13 முதல் ...

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பொதுவாக கூட்டணி என்பது அந்தத் தேர்தல் காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. இன்றைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்திப்பதிலும், எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்வதிலும் நாங்கள் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கான தேவையான திட்டங்களை எங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்றைக்கு ...