நேற்று தமிழக ஆளுநர் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது அரசியல் கட்சி தொண்டர்கள் அவரது கார் மீது கல் மற்றும் கொடி கம்பங்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க இருப்பதாகவும் ...
புதுடில்லி: இந்தியா முதலிடம்… ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்புக்கு பால் உற்பத்தி செய்து, உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா். பால் உற்பத்தி மதிப்பானது கோதுமை, அரிசி உற்பத்தி மதிப்பைவிட அதிகமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள தியோதா் என்ற இடத்தில் பால் பொருள்கள் வளாகத்தையும் ...
தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்தான், அதற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: “முகக்கவசம் அணிய வேண்டும் ...
பா.ஜ.க. சார்பில் துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, அவர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமபந்தியில் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி விருந்து சாப்பிட்டார். அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்தார். இறுதியாக சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ...
தமிழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதற்கு பொதுமக்கள் வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் நேரில் வர தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,இதற்காக தானியங்கி ஒற்றைச் சாளர கட்டட அனுமதி முறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,கட்டட அனுமதி பெற விரும்புவோர் உரிய ஆவணங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டால் போதும் ...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை மக்களின் வாழ்க்கை நிலைமையை புரட்டிப் போட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு, பல மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலை மூடல்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கியுள்ளது. இதனால், அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ...
குஜராத்: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே இருக்கிறது. இந்தியா ஆண்டுக்கு 8.5 ...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கோத்தயபய சகோதரர்கள் வகுத்த பொருளாதார கொள்கைகளே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறி, அவர்களை பதவியில் இருந்து விலகக் கோரி எதிர்க்கட்சியினர், பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உயர்வு, பசி,பட்டினி, விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ...
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின்படி, 2022 மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கான ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்திருந்தார். இந்நிலையில்,ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தில் ...
சுங்க கட்டண வசூலுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குறைவான தொலைவுக்கு அதிக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், அதனை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் சுங்கக்கட்டண வசூலுக்கு முடிவு கட்டப்படும் என ...