இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண பேரணி, கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி கென்னடி திரையரங்கு அருகே உள்ள மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசுசுகையில், இந்து உரிமை மீட்பு பிரச்சாரமானது, கடந்த ஜூன் 28 ஆம் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செந்தோட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர்,கிருத்திகா.இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான காரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு காரில் கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது,குருக்கிலியம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வரும் போது ...

சென்னை : ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை இனியும் தாமதிக்காமல் பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்து கடனாளியான ஆயுதப்படை காளிமுத்து என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ...

காஞ்சிபுரம்: திமுக-வில் பல பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, அக்கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என். கண்டிகை கிராமத்தில் கலைஞர் திடலில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி ...

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால், அதற்கு முன்பாக புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம், துணை குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை ...

ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் தேதி பேரறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் ...

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், ...

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் நடந்து வரும் அதிகார மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. அடிதடி, கலவரம், நிர்வாகிகள் நீக்கம் என முடிவு இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நிலையில், அதிமுக வின் எம்எல்ஏ கூட்டம் ஜூலை 17ஆம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் ...

உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனா 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதலே கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வந்த காரணத்தால் இந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் எதிர்கொண்டு உள்ளது. இதற்கிடையில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் 50க்கும் அதிகமான சீன நகரங்களில் 100க்கும் ...

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா ...