கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வள்ளியம்மன் கோவில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெறுகிறது. அதனையோட்டி அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் அதிமுகவை சேர்ந்த திவாகர், என்பவரை பேனர் வைப்பதில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் நடைப்பெற்று பின்னர் ...
கோவை குறிச்சி குளத்தில் படகு சவாரி இயக்குவதற்கான வசதிகள் உள்ளதா என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி, குமாரசாமி, செல்வம்பதி, கிருஷ்ணாம்பதி மற்றும் குறிச்சி குளங்களில், ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன, குறிச்சி குளத்தில் சைக்கிள் ...
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு அமைச்சராக்க பரிந்துரை ...
சென்னை : கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறுவது வழக்கம். இதற்காக கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, ஒரு பகுதிக்கு விரதம் இருந்து, இருமுடி எடுத்து வந்து ஐயப்பனை தரிசித்து ...
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் தற்போது விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் ...
ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என முதல்வர் விமர்சனம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுவையில், எஸ்.பி. சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிச்சயமாக அமையும். ...
காந்தி நகர்: குஜராத்தில் இன்று நடக்கும் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இதற்காக முறையாக அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் ஜி 20 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், ...
குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, அங்கு தொடர்ந்து 2வதுமுறையாக முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருடன் சேர்ந்து 25 கேபினெட் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். ...
காந்திநகர்: குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாஜவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களை பாஜ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பூபேந்திர படேல் தலைமையில் மீண்டும் பாஜ அரசு அமைய உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், ஆம் ஆத்மி 5 ...
முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி மேயர் பிரியா ராஜன் பயணம் செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்டபோது அவரது கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் ...












