கோவை: ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்குக்கு பணம் தரப்படும் முறைக்கு மக்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேபோல் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து பெறும் வெற்றி தேவையா என்று கேள்வி எழுப்பிய அவர், குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று ...
எடப்பாடி பழனிசாமி தான் இனிமேல் எல்லாம் என்று கூறி விட முடியாது. அவர் தலைமையில் எத்தனை தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என நினைத்து பாருங்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ...
சென்னை:’ ஜெயலலிதா போல, இன்னொரு பெண்மணியை யாரும் பார்க்க முடியாது’ என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி பேசிய ‘வீடியோ’ பதிவு வெளியாகியுள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளில், அவர் நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுப்படுத்தி கொள்கிறேன். ஜெயலலிதா போல ...
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி நடத்தவுள்ளதாக, தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. இந்த விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, ...
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 238 வாக்குசாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்கு சாவடியில் மட்டும் 1,260 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ...
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெறும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். நேரடியாக திமுகவினர் செய்யும் விதி மீறல்கள் குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும். ...
ஒ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.24) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. பழனியம்மாளின் இறப்புக்கு தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். தாயாரின் மறைவு செய்தி கேட்டதும் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு சென்றார். ...
தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். கா்நாடக மாநிலம் பெங்களூரில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்களின் கூட்டம் 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி ...
சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக அக்கட்சியானது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகி இருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களின் மகிழ்ச்சி. ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக் அப்படி எல்லாம் இபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைய ...













