சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மரியாதை செலுத்துகிறார். சென்னை அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். மாலையில் நடக்கும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ...
மதுபான ஊழல் வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் டெல்லி துணை முதல்வர் ...
பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமோதரதாஸ் மோடி. இவர் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை உள்ளிட்ட கோவில்களுக்கும் ...
இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் உரை..!
சென்னை: இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய திட்டமாக நான் முதல்வன் திட்டம் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினேன். நான் முதல்வன் திட்டத்தை கடந்த மார்ச் 1ம் ...
கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்த 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 21 வது நாள் பா.ஜ.க களம் இறங்கும் என்று, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசி இருக்கிறார். தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளம் கடத்தப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது அதனை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் ...
ஸ்ரீநகர்-வாரிசு அரசியலுக்கு புகழ்பெற்ற ஜம்மு – காஷ்மீரில், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாதின் மகன் சதாம் நபி ஆசாதும் தீவிர அரசியலில் குதித்துள்ளார். காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற தனிக் கட்சியை துவக்கினார். தொழிலதிபரான அவரது ...
பெங்களூரு: ஹவாய் செருப்பு அணியும் சாமான்ய மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை ஒன்றிய, மாநில டபுள் இன்ஜின் பாஜ அரசு எடுத்து எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறினார். கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் புதிதாக தாமரை வடிவிலான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.450 கோடி மதிப்பிலான இவ்விமான நிலையத்தில் 300 பயணிகள் ...
திருச்சி: ‘கோடை காலத்தில் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி உறையூர் தாக்கர்ரோடு வள்ளுவர் தெருவில் ரூ.3.35 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கோனக்கரை ரோடு செல்வமுத்து மாரியம்மன் கோயில் தெருவில் ரூ.1 லட்சத்தில் அமைத்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய ...
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் ...












