தூத்துக்குடி: பிராமணர்களுக்கு விரோதியாக செயல்படுவதாக எஸ்வி சேகர் குற்றம்சாட்டி உள்ளதாக அண்ணாமலையிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, எஸ்வி சேகரை கடுமையாக சாடினார். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றால் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் போட்டு தருகிறேன். அவர் போய் புகாரளிக்கட்டும் என சவால் அளித்தார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் ...
சென்னை: மதிமுகவில் காலம் காலமாக ஒரே பதவியில் அமர்ந்திருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புது முகங்களுக்கு முக்கியப் பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் வைகோ. அந்த வகையில் மதிமுகவின் புதிய அவைத்தலைவராக ஆடிட்டர் அர்ஜூன் ராஜும், பொருளாளராக செந்திலதிபனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மதிமுக தலைமைக்கழகச் செயலாளராக இருந்த துரை வைகோ, ...
சென்னை :வரும் லோக்சபா தேர்தல் வெற்றிக்காக, ஆறு மாதங்களில், 100 லோக்சபா தொகுதிகளில் ‘ஊர்வல பிரசாரம்’ நடத்த, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில், மூன்றாவது முறையும் வென்று, ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க, பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தல் ...
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். டெல்லி மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் யூனியன் பிரதேசமாகவே இருக்கிறது. இதனால் அங்கே ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருந்தாலும், சில முக்கிய அதிகாரம் மத்திய அரசுக்கே இருந்து வருகிறது. ...
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்றார். ...
சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில், சதிஷ் உட்பட 9 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ் நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் ...
சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு பெருநிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ...
கலிபோர்னியா: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்காவின் கலிபோர்னியா கூட்டத்தில் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் முழக்கமிட்டனர். ஆனால் ராகுல் காந்தி கோபப்படாமல் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ...
கரூரில் மின்துறை மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கிய ரெய்டு 6வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில் இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒப்பந்ததாரர் வீட்டில் நடைப்பெற்ற ரெய்டில் அள்ள அள்ள பணம் சிக்கியுள்ளது. அந்த பணத்திற்கான கணக்கு கேட்கையில், ...












