வேலூர்: மற்ற நாடுகளைவிட ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி ...

டெல்லி: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தனி விமானத்தில் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். ஐநாவில் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். அமெரிக்காவில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் பெற போட்டா போட்டி நடக்கிறது. பிரதமர் மோடி ...

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் அதிகரித்து தமிழக அரசு அறிவிப்பு.. தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 10,000 இலிருந்து 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞரின் பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுக ...

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கஇல் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த வாரம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ...

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.அந்த வகையில் மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு ...

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை வரவேற்கும் வகையில், இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோர் வாஷிங்டனில் ஒற்றுமை பேரணி ஒத்திகை நடத்தினர்.. பிரதமா் மோடி வரும் 22-ம் தேதி அமொிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரயாட உள்ளார். இவை மட்டுமின்றி ...

தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் வரை காரில் செல்லலாம் என்ற புதிய சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் இடம் வரை தனது ...

திருவாரூரில் கலைஞர் கோட்டம்… இன்று திறந்து வைக்கிறார் நிதிஷ் குமார்.. திருவாரூர் மாவட்டம் காட்டூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள `கலைஞர் கோட்டம்’ திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ...

தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். அப்போது, சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள கல்குவாரி மூலம் ...

திருவாரூரில் நாளை (ஜூன் 20) கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, கருணாநிதி பிறந்த திருவாரூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ...