சென்னை: தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மேலும் 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஓசூர், வேலூர் நகரங்களில் இன்று முதல் மக்கள் விரைவான 5ஜி சேவையை பெற முடியும். இந்த புதிய 5ஜி சேவையை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி ...

சென்னை:”இந்தியா — ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்; கூடுதலாக, 81 ஆயிரத்து, 710 கோடி ரூபாய் ஏற்றுமதி வாய்ப்பும் கிடைக்கும்,” என, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலர் பாலாஜி தெரிவித்தார். இந்தியா — ஆஸ்திரேலியா பொருளாதார கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ...

கோவை: பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டப்படுகிறது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு கொண்டாடுவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை,தேனி மற்றும் தென் ...

கோவை – திண்டுக்கல் பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்டம் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ரெயில் பயணிகள் சங்கங்கள், ரெயில் பயணிகள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று வருகின்ற 13-ந் முதல் 18-ந் வரை கோவை – திண்டுக்கல், திண்டுக்கல்-கோவை வழியாக ...

கோவை: ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை – ராமேசுவரம் வாராந்திர ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் கோவை – ராமேசுவரம் வாராந்திர ...

உத்தரப் பிரதேச அரசு சார்பாக சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) உதவியுடன் உ.பி. அரசு இந்த மாநாட்டை நடத்தியுள்ளது. இம்மாநாட்டில் 500 தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். ரூ.10,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவாக, ஒரு மாநிலத்தில் பெரிய அளவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்போது, ...

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் , பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ...

பொங்கல் பண்டிகை: தல அஜித் துணிவு படத்திற்கு 1500 ரூபாய் பிளாக் டிக்கெட்டுகள் கோவையில் விற்பனை பொங்கல் பண்டிகை ஒட்டி விஜய், அஜித் நடிக்கும் வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளிவர உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொங்கல் விடுமுறை என்பதாலும், தல, தளபதி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படத்தை காண முன் பதிவு ...

கோவை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மத்திய அரசு அஞ்சலக சேமிப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வானது 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து கோவை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் ...

இந்திய ரூபாய் வாயிலாக வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் இந்திய ரூபாய் வாயிலாக வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் (ஆா்பிஐ) பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா். சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ...