கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் நேற்று அங்குள்ள செங்காளிபாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 375 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த சிறுவன்  கைது செய்யப்பட்டார். விசாரணையில் ...

கோவை கெம்பட்டி காலனி 4- வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43)அங்கு கடந்த 30 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு சுண்டக்காமுத்தூர் அண்ணா நகரை சேர்ந்த சத்யநாதன் (வயது 53) என்பவர் ரூ. 16 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.கொடுத்த பணத்தை வெங்கடேஷ் திருப்பி கேட்டார். ரூ 6 ...

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள குறிச்சி அவுசிங்யூனிட் பேஸ் II பகுதியில் மழலையர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 15 ஆண்டுகால பழமையான 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 சந்தன மரங்களை அடியில் இருந்து 4 அடி நீளத்துக்கு வெட்டி ...

கோவை செல்வபுரம் சௌடேஸ்வரி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2-வது மாடியில், அறைகள் எடுத்து விபசாரம் நடப்பதாக செல்வபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கோவை மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் ...

கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் . இந்த நிலையில் மூதாட்டியிடம் அப்பகுதியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரமடைபோலீசில் மூதாட்டி புகார் செய்தார். போலீசார் அந்த நபரை கைது செய்தனர். ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  தாளவாடி மலைப்பகுதியில் இருந்து பொது வினியோக திட்ட ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் வருவாய் துறை ஊழியர்கள் ராமாபுரம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே மொபட்டில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற போது வாகனத்தில் ...

கோவை : சுதந்திர தின விழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கீரரந்தி குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதை யடுத்து மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி கோவை மாநகரிலும், மாவட்டத்திலும் ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் ஓட்டையன்காடு தோட்டத்தில் வசித்து வருபவர் விவசாயி ஈஸ்வரமூர்த்தி வயது (63 ) இவரது மனைவி முத்துலட்சுமி வயது (45 ) இவர்களுக்கு இளங்ளங்கவி வயது(12 ) என்ற மகனும் வாணிஸ்ரீ வயது( 9 )என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்திலிருந்து கறவை ...

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டாவது மாடியில் அழகு நிலையம்-மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக செல்வபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பெண்களை வைத்து ...

கோவை வேலாண்டிபாளையம், கிரி நகரை சேர்ந்தவர் சிவராஜ் இவரது மகள் மோனிஷா ( வயது 26) இவரும் அதே பகுதியை சேர்ந்த பரத் என்பவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் . இருவரும் கணவன் -மனைவி போல வாழ்ந்து வந்தனர் . இதனால் மோனிஷா 4 தடவை கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளார். இந்த நிலையில் ...