புதுச்சேரி : புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து கடம்பூர் போலீசார் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் குன்றி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வேனை போலீசார் ...

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவையில் பல பகுதிகளில் குழுவாகவும் தனித் தனியே வாகன சோதனை செய்த போது உக்கடம் to செல்வபுரம் ...

ஆவடி: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே திருநின்றவூர், கெங்குரெட்டி குப்பத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி சர்மிளா (வயது 25). இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன் ...

கோவை ராமநாதபுரம் ,ஓம் சக்தி நகரில் ” ஒயிட் காலர் அசோசியேட்ஸ்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதை  நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். அதன்பிறகு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து ...

கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் கிராந்தி குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திருநங்கைகளாகிய எங்களை கோவை போலீசார் அடித்து துன்புறுத்தி வருகிறார்கள். எங்களுக்கு வீடும் இல்லை. யாரும் வேலை தருவதில்லை. இதனால் நாங்கள் சிக்னல்களில் நின்று ...

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் காயத்ரி ( வயது 34)இவரிடம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார்.இப்படி பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்று காயத்ரி கூறினார். அதை உரிமையாளர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து இரட்டை அர்த்தங்களில் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.இது குறித்து ஊழியர் ...

திருமணத்தை மறைத்து தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை இளம் பெண் மீது வழக்கு பதிவு  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் நாடார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டு உள்ளது. அதன் பின்பு லோரேனின் ...

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூ ரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி காவல்துறையினர் வருவாய் துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் குன்றியோர் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத் தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை ...

கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2016 – ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நகை பறித்தது சம்பந்தமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கவிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவிதா ...