கோவை: குடிமைப்பொருள் குற்றப்புலாய்வுதுறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் சித்த நாயக்கன்பாளையம் சந்திப்பில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 15 டன் ...

கோவை ஆர் .எஸ் .புரம் .வி.சி.வி.ரோடு .ஆர் ஆர் லேஅவுட்டில் தனியாருக்கு சொந்தமான சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் சீட்டாட்டம் நடப்பதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று திடீர் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்பக்கம் உள்ள சிக்கத் தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானமணி ( வயது 38) ஐ. டி ஊழியரான இவர் கொரோனா தொற்று காலத்தின் போது ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பல்வேறு கட்டங்களாக அவர் அந்த செயலி ...

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரா (வயது 54) மாநகர ஆயுதப் படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் மாணிக்க மூர்த்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் . அவர்களில் ஒரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான். ...

கோவை அருகே உள்ள சோமையம்பாளையம், விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் அஜய் பிரபு ( வயது 26) கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்..இவர் நேற்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது புல்லட் பைக்கை நிறுத்தி இருந்தார். கோர்ட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை யாரோ ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மேற்கு சுகுணாபுரம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 50) எலக்ட்ரிக்கல் பேனல் போர்டு தொழில் செய்து வருகிறார் . இவரது வீட்டில் செல்வபுரத்தைச் சேர்ந்த 2 பேர் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த தங்க கம்மல், வெள்ளி கொலுசு, பித்தளைக் ...

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி முதலீடு செய்து 15 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை இழந்த இளைஞருக்கு அதிரடியாக செயல்பட்டு பணத்தை மீட்டுத் தந்துள்ளனர் கோவை சைபர் க்ரைம் போலீஸார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையத்தை சேர்ந்தவர் ஞானமணி ( 38). ஐ.டி. ஊழியர். இவர் கொரோனா தொற்று ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்த்த வினோத் (எ) ஆண்டி பண்டாரம் கடந்த 2013 ஆம் ஆண்டு பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் மீது வழக்கு ...

கோவை, கரும்புக்கடை, திப்பு நகர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு இருந்தார். அவரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் போத்தனூர் அன்பு நகர் பகுதியை ...

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் கூறிய குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் ...