கொய்யா தோப்பில் பணம் வைத்து சீட்டாட்டம்- 9 பேர் கைது..!

கோவை தொண்டாமுத்தூர் அருகே வண்டிக்காரனூரில் உள்ள கொய்யா தோப்பில் பணம் வைத்து சீட்டாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் பழனியாண்டி அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது பணம் வைத்து சீட்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராம் பிரகாஷ் ( 29 ) தம்பு என்ற உதயகுமார் (36 |பிரபாகரன் ( 33 )கவியரசன்( 29| அருண்குமார் (28) பிரிதிவிராஜ் ( 27 | அருண் குமார் (30 | மிதுலேஸ் (19) தனபால் (30)மற்றொரு அருண்குமார் ( 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சீட்டும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் ஜாமினில் விடுவிக்க செய்யப்பட்டனர்.