கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் : என்.ஐ.ஏ, டி.ஐ.ஜி, சூப்பரண்டு விசாரணை..!

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ, டி.ஐ.ஜி வந்தனா, சூப்பரண்டு ஸ்ரீஜித் ஆகியோர் நேற்று இரவு கோவைக்கு வந்தனர். அவர்கள் கோவையில் தங்கி இருந்து சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சிலிண்டர் வெடிப்பு நடந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் சிலிண்டர் வெடிப்பில் பலியான முபின் வீடு, கைது செய்யப்பட்டவர்கள் வீடுகள் உள்ள உக்கடம் ஜி.எம் நகர் பகுதிகளில் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.