கார் குண்டு வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட நபர்களை பல்வேறு இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரணை.

கார் குண்டு வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட நபர்களை பல்வேறு இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரணை.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ்,பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகிய 5 பேரை NIA அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ஐந்து பேரையும் NIA அதிகாரிகால் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளில் வைத்து அவர்களில் சில கேள்விகள் எழுப்பி விசாரணை மேற்கொண்டு அவர்களை அழைத்து சென்றனர்.

காலையிலேயே NIA அதிகாரிகள் அவர்களை அழைத்து வந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.