இந்த ஆண்டு இறுதிக்குள் வெலிங்டனில் 1,500 அக்னி வீரர்கள் பயிற்சி பெறுவார்கள்- ராணுவ அதிகாரி நம்பிக்கை..!

குன்னூர்: இந்திய அரசால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டம் மூலமாக, நாடு முழுவதும் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்னி வீரர்களின் முதல் குழு, கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்தந்த பயிற்சி மையங்களில் பயிற்சி மேற்கொள்ள தொடங்கினர்.கொரோனா தொற்று காரணமாக, 3 வருட இடைவெளிக்குப் பிறகு, அக்னி வீரர்களுக்கு முதன் முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனைத்து பயிற்சி மையங்களிலும் உடல் பரிசோதனைகள், மருத்துவ பரிசோதனை, எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு கட்ட கடினமான சோதனைகள் மற்றும் வடிகட்டுதல் செயல்முறைகளுக்கு பிறகு, முதல் குழு வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் பயிற்சிக்கு இணைந்துள்ளனர். அவர்களை, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண் டண்ட் பிரிகேடியர் எஸ்.கே.யாதவ் வரவேற்றார்.
பின்னர் அவர் பேசும்போது, “இந்திய ராணுவத்துக்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட, ஒழுக்கமான, அதிக உந்துதல் மற்றும் புத்திசாலியான வீரர்களை உருவாக்க, அக்னி வீரர்கள் 31 வாரங்களுக்கு திட்டமிடப்பட்ட பயிற்சி முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:-
மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரால் பயிற்சியை சீராக நடத் துவதை உறுதி செய்வதற்காக ஏராளமான பயிற்சி, உள்கட்ட மைப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 1,500 அக்னி வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுதப்படைகள் மற்றும் தேசத்தை வலுப்படுத்துவதில் நாட்டின் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு வகிக்க உதவும். அவர்கள் நான்கு ஆண்டுகள் கட்டாயமாக பணிபுரிவார்கள். ஒழுக்கம், திறமை மற்றும் ராணுவ நெறிமுறைகளுடன் அதிகாரம் அளிப்பது தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.