போலி ரசீது கொடுத்து ரூ. 7 லட்சம் மோசடி: கோவை தனியார் கல்லூரி முதல்வர், ஊழியர் மீது வழக்குபதிவு ..!

கோவை பீளமேட்டில் “லோட்டஸ் விஷன் ரிசர்ச்” என்று டிரஸ்ட் சார்பில் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது .இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பியாரி (வயது 45) என்பவர் முதல்வராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இங்கு படித்தவரும் மாணவ- மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்தும்போது கல்லூரி முதல்வரும் ஊழியர் ஜாய்ஸ் நித்யா ( வயது 35) என்பவரும் சேர்ந்து ரசீது கொடுத்துள்ளனர். அந்த ரசீது மீது மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர் .இதை தொடர்ந்து நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் ரூ 7 லட்சத்து 1500 மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மாணவ -மாணவிகள் செலுத்தும் கல்விக் கட்டணத்தை முதல்வர் பியாரி ,ஊழியர் ஜாய்ஸ் நித்யா ஆகியோர் சேர்ந்து கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தாமல் தங்களின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு மாணவர்களுக்கு போலி ரசீது கொடுத்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில்பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கல்லூரி முதல்வர் பியாரி, ஊழியர் ஜாய்ஸ் நித்யா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..