வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கோவை போலீஸ்காரர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் சுல்தான்.இவரது மகள் ரேஷ்மா (வயது 19).இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் போத்தனூரை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வரும் ஷாருக்கான் (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போத்தனூரில் வைத்து திருமணம் நடந்தது. இந்த நிலையில் எனது கணவர் மற்றும் அவரது தாய் ரகமது நிஷா, அவரது சகோதரி சப்ரீம் மற்றும் அவரது கணவர் உமர் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். தொடர்ந்து அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார், போலீஸ்காரர் ஷாருக்கான் உள்பட 4 பேரு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.