கோவை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருட்டு..!

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஓம் முருகா விதியைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 46) வியாபாரி .இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு செங்கத்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் பணம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து குணசேகரன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.