பிரிட்ஜ் ,வாஷிங் மெஷின், கிரைண்டர் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு – வியாபாரி கைது.!!

கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 31) வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 42) இவர்கள் வடவள்ளி சிவசக்தி காலணியில் சேதமடைந்த வாஷிங் மெஷின் , பிரிட்ஜ் கிரைண்டர் ,குக்கர் மற்றும் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அங்கிருந்த வாஷிங் மெஷின் , கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை பங்குதாரர் சந்தோஷ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டாராம். இதில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து யுவராஜ் வடவள்ளி போலீஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து சந்தோசை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.