கோவை சரவணம்பட்டி, சிவசக்தி நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி அமுதவேணி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. கதிர்வேல் குடிப்பழக்கம் உடையவர் .இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இந்த நிலையில் கதிர்வேல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது மனைவி கண்டித்தார் இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் பூரிக்கட்டையால் மனைவிஅமுதவேணியின் ...
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வாரம், ஈரோடு அம்மா பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செந்தில் குமார் (வ45) தனது நண்பருடன் மது குடிக்கும் போது போதையில் ஏற்பட்ட தகராறில் ,நண்பர் ஏர்கன்துப்பாக்கியால் சுட்டதில் வலது கால் தொடையில் குண்டு துளைத்தது . இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ...
கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தா பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார் . இவர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர், 90வயது பாட்டியான கமலாத்தாள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரை பற்றி தகவல்களை அறிந்த ...
கோவை செப்டம்பர் 20ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 37) இவர் மலேசியாவில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ரூ30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி தனது தங்கை உமால் ரஜினா விடம் கொடுத்து அனுப்பினார் . கோவை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யும் போதுஅந்த ...
கோவை அருகே உள்ள போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் தயாளன் ( வயது 42 )இவர் நேற்று தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி பக்கம் உள்ள குளத்தூர் கன்னிமார் கோவில் ஆற்றில் குளிக்க சென்றார் .குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது ...
கோவையில் விபசாரத்திற்காக ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் , வெளி மாநிலங்களில் இருந்தும் அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபசார கும்பல் தலைவன் சிக்கந்தர் பாட்ஷா (வயது 40) அவரது கூட்டாளி ஸ்டீபன் ராஜ் (வயது 35 )ஆகியோரை கோவை மாநகர போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய ...
கோவை சிங்காநல்லூர் சார் – பதிவாளர் அலுவலகம் வெள்ளலூரில் உள்ளது. இங்கு சார் -பதிவாளராக நான்சி நித்யா கரோலின் பணியாற்றி வருகிறார்.இங்கு பத்திரங்கள் பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் ...
கோவையில் பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள், சிறிதும் பெரிதுமாக தொழில் கூடங்கள் உள்ளன. இவைகளில் பணி செய்ய ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஊழியர்களின் ஊதியம் குறைவோ,நிறைவோ அதுபற்றி கவலையின்றி வாழ்க்கையை நகர்த்த தத்தம் கிடைக்கும் வேலையை செய்து கொண்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்துடன் வாழும் சூழல் நிலையே இங்கே காண முடிகிறது. தமிழ் ...
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம், ஜி கே. எஸ் நகரை சேர்ந்தவர் பட்டீஸ்வரன். இவரது மகன் ரவி என்ற ரவீந்திரன் ( வயது 23) இவரை கோவில்பாளையம் போலீசார் வழியம்பாளையத்தில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே ...
கோவை ரத்தினபுரி இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி மெர்சி ( வயது43) இவர் நேற்று அவரது வீட்டில் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் . அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் ...













