தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி சார்பில் வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 2 முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கோவையில் இந்த தேர்வு எழுத 103 பேர் தகுதி பெற்றனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக கோவை பெரிய கடை வீதியில் ...
இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருதரப்பு பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சக வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த அதிரடி பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பளித்தது மற்றும் ...
டிரம்பின் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சொந்தமான ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட்டுக்குள், அமெரிக்க நேரப்படி ஞாயிறு அதிகாலை 1.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேன் உடன் நுழைய முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், துப்பாக்கி ...
சென்னை: எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்ததையடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வர உள்ள சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும். தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை ...
எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ.82 கோடி ரூபாய் தேவையா? என்று கேள்வி எழுப்பிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதும் பேனாவை அரசு மாணவா்களுக்கு அளிக்கலாமே என்றார். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார பயணத்தின் 176 சட்டப்பேரவை தொகுதியாக பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் ...
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு காட்டு யானை தாக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமேஸ்வர் ஓரான் பேசுகையில், யானைத் தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் இழப்பீட்டை, ஒடிசா மாநிலத்தைப் போல ரூ. 6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ...
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறுகிறது.அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 60 மாத வரையிலான குழந்தைகளுக்கு இந்த நுண்சத்து வழங்கப்படுகிறது. சுமார் 1.07 லட்சம் குழந்தைகளுக்கு இந்த திரவத்தை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கண் ...
சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வந்ததை,டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.அவர்கள் திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது. திருப்பூர் வந்த டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார், மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ...
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மேற்கு மண்டலததில் கோவை சரகத்துக்கு (ரேஞ்ச்), உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 33 ...
மேற்குவங்க எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான முரண்பாடுகள், ஆட்சேப மனுக்களை பரிசீலிக்க நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ...













