மும்பையில் நடைபெற்று வரும் WAVES மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில், “பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார்; எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர். மோடியின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார். ...

அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கலைக்​கழகத்​தின் இந்​திய கொள்கை மற்​றும் பொருளா​தார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்​திய மாணவர்​களிடம் பாஜக மூத்த தலை​வர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கைலைக்​கழகத்​தில் படிக்​கும் நீங்​கள் அதிர்​ஷ்ட​சாலிகள். இங்கு உலகளா​விய அறிவை உங்​களால் பெற முடி​யும். படிக்​கும் காலத்​தில் நாம் அடுத்த 30 அல்​லது 40 ஆண்​டு​களுக்​கான வாழ்க்​கைக்கு ...

சென்னையின் சில பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக எழுந்த புகார் தெரிவித்த பத்திரிகையாளரிடம் சென்னை மேயர் பிரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சென்னை மாநகராட்சியில் சமீப நாட்களாக ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ...

புதுடெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை (மே 2) அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவான காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது மற்றும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இந்த மழை டெல்லியில் நிலவிய கோடை வெப்பத்தின் தாக்கத்தை நீக்கியுள்ளது. இருப்பினும் மழையால் ...

எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதன் பின்னணியில் எல்லை ...

சீனா முழுவதும் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. பொருளாதார மந்தநிலையின் மத்தியில், சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் அதிக வரிகளால் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவதையே இது பிரதிபலிக்கிறது என்று ரேடியோ ஃப்ரீ ஆசியா (RFA) செய்தி வெளியிட்டுள்ளது. ஹுனான் மாகாணத்தில் உள்ள டாவோ கவுண்டியில் ...

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், பந்தயம் ஒன்றில் கலந்துகொண்டு, தண்ணீர் கலக்காமல் ஐந்து மது பாட்டில்களை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புஜாரஹல்லா கிராமத்தை சேர்ந்த கார்த்திக், தனது நண்பர் வெங்கட ரெட்டியிடம் 5 மதுபாட்டில்களை முழுமையாக குடிக்க ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டியுள்ளார். பின்னர் தண்ணீர் ...

பாகிஸ்தானுக்கு தீவிரவாத வரலாறு இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும், 26 சுற்றுலா பயணிகளின் உயிரை குடித்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின்னதாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை பின்புலமாக கொண்ட ஜெய்ஷ் ...

சென்னை: அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் மே 4ம் தேதி முதல் தொடங்குகிறது. 29ம் தேதி வரை வெயில் கொளுத்தும் என்றும் அப்போது 108 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அரபிக் கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று தடுக்கப்பட்டு தமிழகம் நோக்கி வருவதால், இடி மின்னலுடன் கூடிய ...

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அதானி குழுமத்துடன் இணைந்து கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் நாட்டின் முதல் சர்வதேச தானியங்கி துறைமுகம் ஆகும். ரூ.8.827 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் சென்று சோதனை ...