நள்ளிரவில் இருசக்கர வாகனம் திருடும் போது உரிமையாளரிடம் வசமாக சிக்கிய கொண்ட பைக் கொள்ளையர்கள்..!

கோவை சுங்கம் பகுதியில் வசிப்பவர் முகமது அலி. இவர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகின்றார். நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் தரைத் தளத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டில் இருந்து இருக்கின்றார். இந்த நிலையில் நள்ளிரவு வாகனத்தை உடைப்பது போன்ற சத்தம் கேட்டிருக்கிறது. வெளியே வந்த போது இரண்டு நபர்கள் வாகனத்தின் சங்கிலியை உடைத்து கொண்டு இருந்தனர் . உடனடியாக அருகாமையில் உள்ள நபர்களை உதவிக்கு அழைத்து கொள்ளையர்களை பிடித்து இருக்கின்றார். உடனடியாக பந்தய சாலை போலீசாரிடம் முகமது அலி தந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து இருசக்கர வாகன கொள்ளைகளை பிடித்து ஒப்படைத்து உள்ளனர். போலீசாரின் விசாரணையில் கைதான நபர் ஈரோட்டைச் சார்ந்த முத்துசாமி மற்றும் தாராபுரத்தைச் சார்ந்த மாயக்கண்ணன் என்பது தெரிய வந்தன. முத்துசாமி மீது ஏற்கனவே ஈரோடு காவல் நிலையத்தில் பைக் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக நான்கு வழக்குகள் பதிவாகி உள்ளது. பந்தய சாலை போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.