கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பைக், செல்போன் பறிப்பு – ஒருவர் கைது.!!

கோவை செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்தவர் ராஜாராம் . இவரது மகன் பாலாஜி (வயது 25) இவர் பைக் டாக்சி நடத்தி வருகிறார். இவர் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ஒயின்ஷாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இவரிடம் பணம் கேட்டார் . அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போன் – பைக் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து பாலாஜி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். வெற்றி செல்வி வழக்கு பதிவு செய்து கரும்புக்கடை ஜெ.ஜெ. கார்டனை சேர்ந்த பாவாடை மோஜி என்ற உஜீத் ரகுமான் (வயது 27) என்பவரை கைது செய்தார் . அவரிடம் இருந்து பைக், செல்போன் மீட்கப்பட்டது.