வாடகை பாக்கி கேட்ட வீட்டின் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் – பெண் மீது வழக்குபதிவு.!!

கோவை ராமநாதபுரம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 53 )சிவில் இன்ஜினியர். இவரது வீட்டில் ரம்யா (வயது 35 )என்பவர்18 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு சிவக்குமார் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ரம்யா .சிவகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே பிடித்து தள்ளினார். இதுகுறித்து சிவகுமார் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் ரம்யா மீது கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..