ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் வரிசையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர். ஆந்திராவில் பெட்ரோல், டிசல் பற்றாக்குறை இல்லை என்று அதிகாரிகள் கூறினாலும் வாகன ஒட்டிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறைதான் டேங்கர்களை அனுப்புவதாகவும் இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளை முடித்துவிட்டு கடந்த நான்கு நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று நள்ளிரவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். வழக்கமான வெள்ளைச் சட்டை மற்றும் ...
தமிழகத்தில் தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. நெல்லை ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 14 மிமீ பதிவானது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தும், ஏனைய ...
தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தியதை கணினியில் வரவு வைக்காமல் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து தபால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் நாராயண பிள்ளை. ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவரது மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நாராயண பிள்ளை தனது ...
சில நாட்களுக்கு முன்புதான், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டது .இந்த உயர்வு அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இப்போது 3 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்போதைய அகவிலைப்படி உயர்வு, ...
சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மீ கட்சியிலிருந்து விலகி ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜாகாவில் இணைந்தனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, விலகிச் சென்ற உறுப்பினர்கள் ஆம் ஆத்மீ தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். அதே நேரத்தில், ஆம் ஆத்மீ தரப்பில் இருந்து விலகிச் சென்ற உறுப்பினர்கள் ...
அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் சரியான நடுநிலையாளர் அல்ல என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் டொனால்ட் டிரம்பின் விருப்பங்களை நிறைவேற்றவே பாகிஸ்தான் பாடுபடுகிறது, அமெரிக்க விருப்பங்களுக்கு எதிராக பேச மறுக்கிறது என்று பாகிஸ்தான் மீது ஈரான் குற்றம்சாட்டியிருக்கிறது.ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான ...
கொடைக்கானல் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை நட்சத்திர ஏரியைச் சுற்றி நடைப்பயிற்சி மேற்கொண்டார்.அவருடன் செல்ஃபி எடுத்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ந்தனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், கொடைக்கானலில் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் வந்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் ...
மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்தின், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெருமளவு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் ...
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, 2026) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட இந்தத் திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) கணக்கீட்டின்படி, இந்த அதிர்வு 6.1 ரிக்டர் அளவாகவும், ...













