கோவை : உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நிதின்குமார் .இவரது மனைவி குஷ்பூ உபாத்யாய் (வயது 32) இவர் வட கோவையில் தமிழ்நாடு வனத்துறை அகாடமியில் 18 மாத பயிற்சிக்காக வந்திருந்தார் .அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று இவர் ஆர் .எஸ். புரம் டி.பி ரோட்டில் ” வாக்கிங்” சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மேகராஜ் (வயது 57 )ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி தொழிலும் செய்து வந்தாராம்.இதுகுறித்து பொள்ளாச்சி டவுன் கிழக்கு பகுதி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது .போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். ...

கோவை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் அழகில் அபிலாஷ் மயங்கினார். கடந்த சில மாதங்களாக அவர் இளம்பெண்ணை ஒருதலையாக ...

கோவை: திண்டுக்கல் ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் கனகவேல். இவர் திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஜெயசூர்யா (வயது 22). ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். காதல் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் டி. பாறைபட்டியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் கடந்த 2018-2019-ம் ஆண்டு அரசு இல்லம் என்ற முகவரியில் ‌‌தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தை சேர்ந்த வி.வெங்கடேஷ் என்பவர் நடத்தி வந்தார். ‘ தங்கள் நிறுவனத்தில் பொதுமக்கள் காரினை கொடுத்தால் தாங்கள் நிறுவன மூலம் மாதம் ரூ.1000 கொடுப்பதாகவும், ...

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்று குண்டு வெடிப்பு தினம் என்பதால் கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ...

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நடை திறந்த முதல் நாளிலேயே நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு மாசி மாத பூஜைகள் தொடங்கியது. மாதத்தின் ...

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனால் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் பெருகி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருவதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருவதால் சர்வதேச நிறுவனங்கள் ...

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. நடுவில் இடைவெளியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி இன்று நிறைவு பெற்றுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியின் கடைசி நாளான இன்றைய கேள்வி நேரத்தில் பல்வேறு முக்கிய கேள்விகளை எதிர்க்கட்சி, ...

சிவராத்திரி பண்டிகை வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் 21 லட்சம் மக்கள் விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவஜோதி அர்ப்பணம் 2023 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளக்குகள் ஏற்றப்படுவதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 11.71 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட ...