பயணிகளின் கவனத்திற்கு… கோவை – ராமேசுவரம் வாராந்திர ரயில் பகுதியாக ரத்து..!

கோவை: ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை – ராமேசுவரம் வாராந்திர ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் கோவை – ராமேசுவரம் வாராந்திர ரயில் (எண்: 16618) ராமநாதபுரம் – ராமேசுவரம் இடையே ஜனவரி 10-ந் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இந்த ரயிலானது, கோவை – ராமநாதபுரம் இடையே மட்டுமே இயக்கப்படும். இதேபோன்று ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 7.10 மணிக்குப் புறப்படும் ராமேசுவரம் – கோவை வாராந்திர ெரயில் (எண்:16617) ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, ராமநாதபுரம் – கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.