இன்று முதல் நீங்கள் நலமா? திட்டம்… பொதுமக்களிடம் தொலைபேசியில் உரையாடிய முதல்வர்.!!

தமிழகத்தில் 2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்தது . தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் மக்களை உணர்வு பூர்வமாக கவரும் வகையில் புதிய திட்டம் ஒன்றை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் பெயர் ” நீங்கள் நலமா?” இத்திட்டத்தின் மூலம் முதல்வர் , அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், முதன்மை செயலர், தலைமைச் செயலர் என ஒருவர் மக்களிடம் நேரடியாக பேசுவர்.

திட்டங்களின் பயன்கள் கிடைக்கபெற்றது குறித்து மக்களிடம் நேரடியாக கேட்டறிவர் குறைகள், புகார்கள் இருக்கும்பட்சத்தில் அவைகளையும் கேட்டறிந்து விரைவில் ஆவன செய்யப்படும். இத்திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 முதல் மக்களை தேடி மருத்துவம்’, ‘இல்லம் தேடி கல்வி’, ‘உங்கள் ஊரில் கலெக்டர்’ , கலைஞர் மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம், பள்ளிகளில் காலை உணவு உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் பயன்கள் எல்லாம் உரிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா? என்பதை உறுதி செய்யும் வகையில் ” நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. துறை ரீதியான தலைவர்கள் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டறிவர். முதற்கட்டமாக நலத் திட்டங்கள் பற்றியும், அடுத்த கட்டமாக அரசு துறைகளில் வழங்கப்படுகிற சேவைகள் பற்றியும், கருத்துக்கள் பெற்று அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..