கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக ஆனந்த ஆரோக்கியராஜ் இன்று பொறுப்பேற்பு..!

கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வுபெற்று சென்றுள்ளார்..அவருக்கு பதிலாக சிறப்பு நுண்ணறிவு பிரிவுஉதவி போலீஸ் கமிஷனர் மகேஸ்வரன் கூடுதலாக இந்த பொறுப்புகளை கவனித்து வந்தார்.கடந்த வாரம் கோவை மாநகர நூண்ணறிவு உதவி போலீஸ் கமிஷனராக ஆனந்த ஆரோக்கியராஜ்  நியமிக்கப்பட்டார்..இவர் இன்று பொறுப்பேற்று கொண்டார் . இவரிடம் உதவி கமிஷனர் மகேஷ்வரன் பொறுப்புகளை ஒப்படைத்தார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்..