அளவுக்கு அதிகமாக மது குடித்து காருக்குள் மயங்கி கிடந்த இன்ஜினியர் உயிரிழப்பு.

கோவை ஏப் 29 சேலம் மாவட்டம் குமாரசாமி பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 44) இவர் கடந்த 3 ஆண்டுகளாக காளப்பட்டி, தங்க மாரியம்மன் வீதியில் தங்கி இருந்து சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வந்தார்.நேற்று இவர் கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு முன்நிறுத்தியிருந்த காரில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவிதயாள நாயகி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.