அதிமுக பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று 2 மணிக்கு விசாரணை.!!

திமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது.

டிசம்பர் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக இரண்டு வார காலம் விடுமுறைக்கு பின் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது. மதியம் 2 மணிக்கு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கின் விசாரணை விரிவாக நடைபெறும் என தெரிகின்றது.