தேர்தல் பறக்கும் படைக்கு பயந்து கடையில் வைத்த பணம் கொள்ளை – அதிர்ச்சியில் மயங்கி விழுந்த உரிமையாளர்.!!

பூந்தமல்லி: பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதி இவர் காட்டுப்பாக்கத்தில் கார் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். கடையில் விற்பனை செய்த பணம் ரூபாய் 40 ஆயிரத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் வழியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து பணத்தை பிடுங்கி கொள்வார்கள் என நினைத்து பயந்து கொண்டே கடையில் 40 ஆயிரத்து பூட்டிவிட்டு வீட்டு செலவுக்கு ரூபாய் 20000-யை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தார். கடையில் பூ ட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டு கடையின் உள்ளே சென்று பார்த்தார். உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டு ஆராய்ந்து பார்த்தார். அதில் வைக்கப்பட்டிருந்த ரொக்க பணமும் ரூ 40 ஆயிரமும் கொள்ளை போயிருந்ததை பார்த்து மயங்கி கீழே விழுந்தார் . அருகில் இருந்தவர்கள் தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்பினர். இதுகுறித்து பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது . அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்..