அருள்மிகு எல்லாத்தம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழா..!

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அத்திப்பட்டு கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லாத்தம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடித் திருவிழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், கும்பம் படையல் பூஜை, அம்மன் திருவீதிஉலா, கிடாவிருந்து  போன்றவை  நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன், துணைத்தலைவர் அருண்குமார், செங்குன்றம் சரக சட்டஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் ஆலய பொறுப்பாளர்கள்,  சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.