கோவை : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் .இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 21) இவர் தற்போது சூலூர் பக்கம் உள்ள கரியம்பாளையத்தில் வசித்து வந்தார் .நேற்று பைக்கில் அவிநாசி -கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .பைக்கின் பின்னால் சின்னியம்பாளையம் சதீஷ்குமார் (வயது 21) இளவரசன் (வயது 19) ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சர் வேன் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சந்தோஷ் குமார் இறந்தார். சதீஷ்குமார் இளவரசன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக வேன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
Leave a Reply