கோவை ஒண்டிப்புதூரில் 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே வாலிபர் அடித்து கொலை – பொதுமக்கள் குமுறல்..

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே தண்டவாளம் அருகே டாஸ்மாக் மது கடை உள்ளது.இந்தக் கடையின் பின்புறம் நேற்று ஒருவர் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம்,கோட்டையூர் அன்சட்டி தாலுகா, பீம பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மகாதேவன் ( வயது 24) என்பது தெரிய வந்தது.இவர் ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.இவரது தலை,மார்பு, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயம் இருந்தது தெரிய வந்தது..டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட மோதலில் இவரை யாரோ கொலை செய்திருப்பது தெரிய வந்தது.. ஒண்டிப்புதூர் ரயில் தண்டவாளம் அருகே உள்ள அந்த டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..