வாகன ஓட்டிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு-ஜூலை 1 முதல் அமல் ..!

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூலையில் சுங்க கட்டணம் உயர்த்த அனுமதி உள்ளது. அதன்படி வரும் 1ம் தேதி முதல், இச்சாலையில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.தற்போது, கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் 30 ரூபாயில் இருந்து 33 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 49 ரூபாயில் இருந்து 54 ரூபாய்; பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கான கட்டணம் 78 ரூபாயில் இருந்து 86 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.உள்ளூர் கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான மாத கட்டணம் 350 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.