ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய நண்பரின் தலையில் கல்லை போட்டு படுகொலை : தொழிலாளி போலீசில் சரண்-கோவையில் பயங்கரம்..!

கோவை : கேரளாவை சேர்ந்தவர் முஹம்மது பாசில் (வயது 28 ) இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் தங்கியிருந்து வாழ்க்கை நடத்தி வந்தார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பாட்டில் மற்றும் குப்பை சேகரிப்பு தொழில் செய்து வந்தார் .அதே பகுதியில் கேரளா சேர்ந்த ரமேஷ் ( வயது 51) என்பவரும் தங்கி இருந்தார். அவர்கள் 2 பேரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர்.இதனால் வேலை முடிந்தது அவர்கள் 2பேரும் சேர்ந்து மது குடித்து வந்தனர்.மேலும் அவர்கள் 2பேரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் மது குடித்தனர். அப்போது முகமது பாசில் ரமேசை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். அதற்கு ரமேஷ் மறுத்தார் . ஆனாலும் அவரை முகமது பாசில் தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு முகமது பாசில் படுத்து தூங்கிவிட்டார். ஆனால் அவர் மேல் ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் ரோடு ஒரத்தில் ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த முகமதுபாசில் தலையில் கல்லை போட்டார். இதில் படுகாயம் அடைந்த முகமது பாசில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்ததும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயபடுத்தியதால் ஆத்திரமடைந்த ரமேஷ் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது .போலீசார் ரமேசை தேடி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் துடியலூர் போலீசில் நேற்று சரண் அடைந்தார்.போலீசார் அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜரர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..