நாய்களை கத்தியால் குத்திய வாலிபர் மீது வழக்கு.!!

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம், சுப்பிரமணியம் வீதியில் 2 தெரு நாய்கள் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் ரோட்டில் கிடந்தது. இது குறித்து மிருகவதை தடுப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வெங்கிட்டாபுரம் சுப்பிரமணி வீதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ் ( வயது 21) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை போலீசார் தேடி வருகிறார்கள்..