மனைவியை கல்லால் தாக்கிய கணவர் மீது வழக்கு..!

கோவை குனியமுத்தூர் பிளேக் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (41). இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 3 நாட்களுக்கு முன்பு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு கண்டித்தார். இதில் கோபம் அடைந்த லட்சுமணன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கினார். இதில் காயமடைந்த முத்துலட்சுமி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்‌ . இதுகுறித்து முத்துலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.