தண்ணீர் என நினைத்து ஒயிட் பெட்ரோலை குடித்த 3 வயது குழந்தை பரிதாப பலி..

கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 28) கோவை ராஜ வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 3 வயது பெண் குழந்தை இமான்சு.சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தினேஷ் குமாரின் உறவினரின் கடிகாரம் சரிபார்க்கும் கடைக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வாட்ச் சுத்தம் செய்ய வைத்திருந்த ஒயிட் பெட்ரோலை தண்ணீர் என நினைத்து அந்த குழந்தை குடித்து விட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.