கோவையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் செயின் திருட்டு…

கோவை பெரியார் நகர் ஜாகீர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகள் மகேஸ்வரி( வயது 21) இவர் நேற்று டவுன் பஸ்சில் பயணம் செய்தார் காமராஜர்புரம் சந்திப்பில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போதும் இவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ பஸ்சினுள் திருடிவிட்டனர்.இது குறித்து மகேஸ்வரி ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.