வீட்டில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் செயின் திடீர் மாயம்.!!

கோவை காந்திபுரம், அலமு நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில், முதல் தளத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம். இவரது மனைவி நித்யா (வயது 40) கோல்டு கவரிங் கடை வைத்துள்ளனர். நேற்று இவர்கள் வீட்டுக்கு மூட்டை பூச்சிக்கு மருந்து தெளிப்பதற்காக 2 பெண்கள் வந்தனர். அவர்கள் மருந்து தெளித்துவிட்டு வெளியே சென்ற பிறகு நித்யா படுக்கை அறையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் செயினை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து நித்யா காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..