29 பேருக்கு புதிய பொறுப்பு – முதல்வர் அதிரடி

ரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக வெற்றிக் கழகம் தனது ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியை விரிவுபடுத்தியுள்ளது.இதற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த வைகைச்செல்வன், கலைராஜன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் அமைப்பு பலப்படுத்தப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

தலைமை நிலையச் செயலகத்தின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர்களாக CTR நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் அறிவிப்புகளை ஒருங்கிணைத்து பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கருத்துகளை இன்னும் வலுவாக எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தச் செய்தித் தொடர்பு அணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அணியில் மொத்தம் 29 நிர்வாகிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.