வல்லூறுகள் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள நிபுணரின் பரிந்துரைகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடா் எட்வின் பிரபாகா், வல்லூறுகளை பாதுகாக்க அரசு 14 போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு இதுதொடா்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தாா்.
மத்திய அரசு தரப்பில், வல்லூறுகளைப் பாதுகாக்க மத்திய அரசு இதுவரை ரூ.26 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. அந்த நிதி முறையாக செலவிடப்பட்டதா, என்பது குறித்து அரசு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனக் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வல்லூறுகள் பாதுகாப்பு தொடா்பாக மனுதாரா் தாக்கல் செய்துள்ள நிபுணரின் பரிந்துரைகளை தமிழக அரசு பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.









