முட்டைகள் அதிகம் உட்கொள்ளப்படும் புரதச்சத்து உணவுகளில் ஒன்று என்பது ஏற்கனவே தெரிந்ததே. இதில் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளது என்பதால் பலரும் அடிக்கடி முட்டைகளை உட்கொள்கிறார்கள்.தேவைப்படும் போது சாப்பிடலாம் என்பதற்கான பலரும் அதிகளவிலான முட்டைகளை வாங்கி சேமித்து வைக்கின்றனர். ஆனால் முட்டையை அதிகளவில் வாங்கி சேமித்து வைப்பவர்கள் சிந்திக்காத ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, முட்டைகளுக்குக் கூட காலாவதி தேதி இருக்கும், தவறாக சேமித்து வைத்தால், அவை விரைவாக கெட்டுவிடும். காலாவதியான முட்டைகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கடுமையான உணவு விஷத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விற்கப்படும் முட்டைகள் மீது, முட்டையிட்ட தேதி மற்றும் காலாவதி தேதி (Expiry Date) கட்டாயம் அச்சிடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டைகள் பெரும்பாலும் எந்த அடையாளக் குறியீடுகளும் இன்றி விற்கப்படுகின்றன.
இந்த புதிய விதிமுறை மூலம் நுகர்வோர் புதிய முட்டைகளை வாங்குவதை உறுதி செய்யவும், கெட்டுப்போன முட்டைகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவரங்கள் இல்லாமல் (தேதி இல்லாமல்) முட்டைகள் வர்த்தகம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அவை மனிதர்கள் உண்ணத் தகுதியற்றது என முத்திரையிடப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும்.
காலாவதியான முட்டைகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கடுமையான உணவு விஷத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்ய, நீண்ட நாட்களாக வைக்கப்பட்ட முட்டைகளை விற்பனை செய்வதைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், முட்டைகள் இடப்பட்ட பிறகு சுமார் 30 டிகிரி செல்சியஸ் சுற்றுப்புற வெப்பநிலையில் சேமிக்கப்பட்டால், இரண்டு வாரங்களுக்கு மனித நுகர்வுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும். பொதுவாக, 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் சேமிக்கப்படும் முட்டைகள் ஐந்து வாரங்களுக்கு நுகர்வுக்குப் பாதுகாப்பானவையாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வரும் ஏப்ரல் 1 முதல் இந்த உத்தரவைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அலுமினிய பாத்திரங்களுக்கு ISI தரச்சான்று பெறும் நடைமுறை வரும் அக்.1 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளன. அதாவது, IS 1660: 2024 என்ற தர நிலைகளை பராமரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. பாத்திரங்களின் தடிமன், அளவு, கைப்பிடிகளின் எடை தாங்கு திறன், தட்பவெப்ப தாங்குதிறன் என பல்வேறு நிலைகளில் தர நிர்ணயம் அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன் மூமூலம், பாத்திரத்தில் 99.5% அலுமினியம் இருப்பது கட்டாயமாகிறது.









