கரண்ட் பில் இனி மாசம் மாசம் தான்..?

திமுக அரசு மக்களின் மனங்களை கவர அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்வு, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்து, தற்போது மாதாந்திர மின் கட்டண முறையில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் சுமார் 1.25 கோடி பெண்களுக்கு கோடைக்கால சிறப்புத் தொகை மற்றும் முன்பணம் என சேர்த்து ஒரே தவணையாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இது அதிமுகவின் ‘குலவிளக்கு’ திட்டத்திற்குப் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.பல ஆண்டுகளாக நீடித்து வந்த பென்ஷன் கோரிக்கைக்குத் தீர்வாக ‘தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் கடைசிச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக உறுதி செய்யப்படும். ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10% பங்களிக்க வேண்டும், மீதமுள்ள தொகையை அரசே ஏற்கும். இதற்காக அரசுக்கு உடனடியாக ரூ.13,000 கோடி கூடுதல் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மூன்றாவது பெரிய அறிவிப்பு இதுதான். திமுகவின் தேர்தல் வாக்குறுதியான “மாதாந்திர மின் கட்டண முறை” அமல்படுத்த ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி முடிந்த பிறகு, இந்த முறை படிப்படியாக நடைமுறைக்கு வரும். இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கிடப்படுவதால் ஏற்படும் கூடுதல் கட்டணச் சுமை குறைந்து, நடுத்தர மக்களுக்குப் பெரிய அளவில் பணம் மிச்சமாகும்.

வீடு அல்லது கடைகளுக்குப் புதிய மின் இணைப்பு கோரினால், அதிகபட்சம் 3 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்படும்.எனர்ஜி மீட்டர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மக்களே அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மீட்டரை வாங்கி வழங்கலாம்.கேபிள்களுக்காக மக்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட மேம்பாட்டுக் கட்டணத்தை மீண்டும் பொதுமக்களுக்கே திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளது.