கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ராகேஷ் குமார் (வயது20) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நபிலாஸ் தண்டி மகன் சுதன் தண்டி(வயது25) என்பவரை கைது செய்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று முடிவு பெற்று குற்றவாளி சுதன் தண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் தலைமை காவலர் அனந்த செல்வக்கனி ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் பாராட்டினார்..